Saturday, December 25, 2010

கவிதை நீ

அரை தூக்கத்தில்
மனதினுள் எழுந்த
கவிதை நீ..
நான் எழுந்ததும்
நீ உறங்கி விடுகிறாய்.
-ஜாஃபர் ஷாதிக்,சி
(டிசம்பர் 26, 2010)

Saturday, December 18, 2010

டிராபிக் ஜாம்

சிக்னல் இல்லாத சாலைகளில்
அதிகரித்து வரும் போக்குவரத்து போல
திட்டமிடாத என் வேலைகளில்
தினமும் டிராபிக் ஜாம் ..
          
                  - ஜாஃபர் ஷாதிக்.சி -
                      (டிசம்பர் 19 , 2010)

Monday, November 1, 2010

ஜலதோஷம் :)

எனக்கு
பிடிக்காவிட்டாலும்,
அடிக்கடி
ஜலதோஷம்
பிடிக்கிறதே
எனக்கு.. ?

என்னை
பிடித்தவர்கள்
அடிக்கடி
என்னை
நெனைப்பதாலோ?


          -ஜாஃ பர் ஷாதிக்.சி 
(நவம்பர் 2, 2010)

Monday, June 14, 2010

சிரிப்பு

உன்
முழுமையில்லாத
சிரிப்பு..
மூழ்கடித்துவிட்டது.
என்
முழுநாளின்
சிரிப்புகளை!
                                 -ஜாஃபர் ஷாதிக் 

Thursday, June 3, 2010

மறக்க முடியாத மொக்கை

அடிக்கடி கமெண்ட் பண்ணுவான்.
எல்லாம் மொக்கையா இருக்கும்.
நாங்க பேசிக்கிறதே ஃபேஸ்புக்'ல மட்டும் தான்.

அவன் ஜோக் அடிச்சா சிரிப்பே வராது
ஆனா funny -ஆ பேசுறேன்னு நினைப்பு.


எல்லா காமெண்டிற்கும் ஒரு பதில் இருக்கும்
ஏன்னா அவனுக்கும் வேற வேலையே கிடையாது

பெரிய கமெண்ட் அனுப்பினா அவன் வாசிக்க மாட்டான்
வெட்டியா தான் எப்பவும் பேசுவான்,
ஆனா அது ஒரு different -ன்னு சொல்லிப்பான்.


வேஸ்ட், useless ... லாக் அவுட் பண்ணவே மாட்டான்,
எப்பவும் reply வரும். chat பண்ணிட்டே இருக்கலாம்.
ஏதாவது உருப்படியா பேசினா அவனுக்கு பிடிக்காது.

தோசைன்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்,
கேட்டா இட்லி கூட்டம் கூட்டமா வேகும்,
தோசை தான் சிங்கிளா வேகும்ன்னு சொல்வான்.

முன்னற்றதுக்கான வாசமே வீசாது,
அதுல என் டைம் எல்லாம் காலி.

அவன் பேரு 3+4 எழுத்து,
மொக்க, ரொம்ப பெரிய மொக்க.
எப்படி மறக்க முடியும், லொள்

Tuesday, May 25, 2010

இரு வரியில் ஒரு ஆறுதல்

என் முகவரிக்கு, எனக்காக 
என் பெயர் குறிப்பிடாமல் 
ஒரு கடிதம் வந்தது.
உன் வார்த்தைகள், உன்னால் 
உன் பெயர் சொல்லாமல் 
ஒரு அறிவுரை சொன்னது.

என் பெயர் குறிப்பிடாத 
எனக்கென்ற கடிதமும் 
உன் பெயரில்லாத 
உன்னுடைய வார்த்தைகளும் 
எப்போதும் அபூர்வம்.

இரு வரியே இருந்தாலும் 
இருமலுக்கு மருந்து போல 
கேட்டதுக்கு மட்டும் பதில் இருந்தது.

Monday, April 12, 2010

பேஸ்புக்


பேஸ்புக், வாழ்வில் நாம் திரும்ப சந்திப்போம் என்று நினைத்துக் கூட பார்த்திடாத பல மனிதர்களை இதுவே  சேர்த்து வைத்தது . இன்னும் எனது கனவுப் பாதையில் பல மனிதர்களை அறிமுகப்படுத்தியும் வழி காட்டியும் வெற்றிப் பாதையின் பல இலக்குகளை சுலபமாக்கி என் வாழ்க்கை என்னும் சாலையை மென்மையாக்கியது.
புதுப்புது வழிகளையும் தந்து இன்னும் பல பரிமாணங்களையும் கூட அறிமுகப்படுத்திய இதுவே என் வாழ்வின் முக்கிய பொக்கிஷத்தையும் ஒரு நாள் தந்தது. பொக்கிஷத்தை விட அதைத் தந்ததால் இதன் மீது எனக்கு அதிகமான அன்பு இருந்தது. என்னை இணைத்த சாலையை விரும்பாமல் என் பயணம் முழுமை ஆகாதே.. என் புதிய பயணமும் இந்த சாலையில் சென்றது.. எத்தனை விதமான உணர்வுகள், கவிதைகள், சந்தோஷங்கள் ... எல்லாம் இந்த சாலையிலே அதிகம் பதிவாகப்பட்டது.
பூ, மொட்டு, மலர் என பலவிதமான வாசனைகளை உணர்த்த இந்த காதலெனும் மனம் ஒரு கூந்தல் தேடி சென்றுவிட்ட பிறகு இனி போக இருப்பது குப்பையில் மட்டுமே என்று இருக்கையில், அந்த மலரை ஒரு தண்ணீரில் மிதக்க விட்டு காதல் என்கிற மணம் இன்னும் இருக்கச் செய்து ரசித்து, நானே நினைத்துவிடாத மணம் எனக்குள்ளே வீச சென்றாய்.
பல யுகங்களை சிறு பொழுதில் உணரச் செய்தது, பல விதிகளைக் கற்றுத் தந்து தண்ணீரில் இருக்கும் நீர் இனி வாடிவிட இன்னும்  சில காலம் இருக்கும் என்று இருக்கையில் தண்ணீரை நீயே குடித்து விட்டாய். 
இரவில் விளக்கை அணைத்த பின் காகிதமோ, பேனாவோ தேட முடியாத பொழுதில் மனதில் தோன்றும் கவிதையைப் போல என் வாழ்வில் வந்துவிட்டுச் சென்றாய். விடிந்த பின் அந்த கவிதையை நினைக்க முயற்சித்தால் உன் விடியலை தேடி விடியாமலே இருந்து விட்டது என் மனம்.  இன்று  நீ இல்லாத ஊரில் உனக்கென்று பயணம் செய்து எனக்கென்ன பயன்? 

Tuesday, April 6, 2010

என் கடல் அலையே ..

கடல்ல வந்த அலைகளில் 
     நான் எடுத்த புகைப்படம் நீ !
எல்லா அலையும் வந்தது, போனது 
நீயும் அலையாய் வந்தாய் - ஆனால் 
நான் எடுத்த புகைப்படத்தில் 
நீ போகவில்லை, போகவும் முடியாது.  

WORLD NEWS

உலகில்  தினமும் என்ன நடக்கிறது என்பதை விட 

உன் மனதில் என்ன நடக்கிறது என்பதே பெரிய போராட்டமாய் இருக்கிறது

Saturday, April 3, 2010

மௌனம்

உன் உதட்டில் 
   நான் சிரித்தேனே 
என் சந்தோசம் 
   நீயாய் இருக்கையில்.. 

உன் உதட்டால்
   சிரிப்பை தின்றாயே
உன் மௌனத்தால் 
   என்னை கொல்கையில்..

ஏப்ரல் 4, 2010 (ஞாயிறு)

Wednesday, March 17, 2010

கணக்கிடாத மடங்கு அன்பு

உன்னிடமுள்ள எல்லா அன்பையும் அனுபவித்துவிட்ட எனக்கு
நமக்குள் ஏதோ மனஸ்தாபங்கள் வந்து பிரிந்து விடுமோ என்று
பேசாமல் இருந்துவிடலாமென்று கூட நினைக்கிறேன்.

ஆனால் ஒவ்வொரு முறையும் கணக்கிடாத மடங்கு
அதிகரித்தி கொண்டே இருக்கையில் எப்போதும்
பேசிக் கொண்டே இருக்கலாமென்று இருக்கிறது.

-மார்ச் 17, 2010 (புதன்)

Tuesday, March 16, 2010

நண்பன்

ஒவ்வொரு முறை நான்
ஏமாறும்போதும் - இனி
எந்த மனிதரையும்
நம்பிவிடக் கூடாதென்று
கண்டிப்புடன் இருக்கிறேன்

இன்னும் ஆயிரம் மனிதர்களிடத்திலும்
ஏமாந்துவிடலாம்
உன்னைப் போல ஒருவன்
கிடைப்பானெனில் !

-மார்ச் 16, 2010 (செவ்வாய்)

ஜன்னலில் ஒரு மின்னல்

இரவின் இருளில் ஜன்னல் வழியாக வந்தது வெளிச்சம் இல்லை. மின்னல் என்று புரிவதற்குள் பாதி தூக்கம் கலையவில்லை பாதி தூக்கம் விழித்து விட்டேன். இங்கு நன்றியா சாபமா தெரியவில்லை

-மார்ச் 15, 2010 (திங்கள்)

வெட்கப்படும் கண்ணீர்த்துளிகள்

உனது அன்பான வார்த்தைகளை கண்டு அவ்வப்போது எடடிப் பார்த்தாலும்
நீ இருக்கையில் வெட்கிதது கொண்டு இல்லாதபோதே கொட்டி விடுகிறது
வெட்கப்படும் என் கண்ணீர்துளிகள்

-மார்ச் 16, 2010 (செவ்வாய்)



Monday, February 15, 2010

தமிழில் ஒரு ப்ளாக்

தமிழில் ஒரு ப்ளாக் - இது தமிழில் இதுவும் ஒரு ப்ளாக். படிக்கும் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்