Wednesday, March 17, 2010

கணக்கிடாத மடங்கு அன்பு

உன்னிடமுள்ள எல்லா அன்பையும் அனுபவித்துவிட்ட எனக்கு
நமக்குள் ஏதோ மனஸ்தாபங்கள் வந்து பிரிந்து விடுமோ என்று
பேசாமல் இருந்துவிடலாமென்று கூட நினைக்கிறேன்.

ஆனால் ஒவ்வொரு முறையும் கணக்கிடாத மடங்கு
அதிகரித்தி கொண்டே இருக்கையில் எப்போதும்
பேசிக் கொண்டே இருக்கலாமென்று இருக்கிறது.

-மார்ச் 17, 2010 (புதன்)

Tuesday, March 16, 2010

நண்பன்

ஒவ்வொரு முறை நான்
ஏமாறும்போதும் - இனி
எந்த மனிதரையும்
நம்பிவிடக் கூடாதென்று
கண்டிப்புடன் இருக்கிறேன்

இன்னும் ஆயிரம் மனிதர்களிடத்திலும்
ஏமாந்துவிடலாம்
உன்னைப் போல ஒருவன்
கிடைப்பானெனில் !

-மார்ச் 16, 2010 (செவ்வாய்)

ஜன்னலில் ஒரு மின்னல்

இரவின் இருளில் ஜன்னல் வழியாக வந்தது வெளிச்சம் இல்லை. மின்னல் என்று புரிவதற்குள் பாதி தூக்கம் கலையவில்லை பாதி தூக்கம் விழித்து விட்டேன். இங்கு நன்றியா சாபமா தெரியவில்லை

-மார்ச் 15, 2010 (திங்கள்)

வெட்கப்படும் கண்ணீர்த்துளிகள்

உனது அன்பான வார்த்தைகளை கண்டு அவ்வப்போது எடடிப் பார்த்தாலும்
நீ இருக்கையில் வெட்கிதது கொண்டு இல்லாதபோதே கொட்டி விடுகிறது
வெட்கப்படும் என் கண்ணீர்துளிகள்

-மார்ச் 16, 2010 (செவ்வாய்)